Monday, September 23, 2019

பேய் இருக்கா?

அன்புடையீர் வணக்கம்...

காலம் காலமாக, தீர்க்கமுடியாத ஒரு முடிச்சு அமானுஷ்யம்...

உலகில் பேய் பிசாசு இருக்கிறதா,
இல்லை அவையாகும் வாய்வழி கதைகளா,

உலகில் பகல் இருட்டு, சூரியன் சந்திரன்,
நீர் நெருப்பு, நன்மை தீமை,
இப்படி அற்புதமாய் யாவற்றிலும், இரண்டு துருவங்கள் பயணிக்கின்றன.

கடவுள் மனிதனை படைத்தானா...
மனிதன் கடவுளை படைத்தானா...

இப்படி விடை காண முடியாத கேள்விகள் அதிகம் உலவுகின்றன..

உலகில் பேய்கள் நிச்சயமாக இருக்கத்தான் செய்கிறது, அவை ஒவ்வொரு மொழிக்கும் பெயர் மாறுபடுகிறது.

கருவில் உருவாகும் ஒரு உருவிற்க்கு,
எங்கிருந்தோ, ஒரு உயிர்ப்பிக்கும் ஆன்மா வருகிறது.

அந்த உடலை விட்டு பிரியும் பொழுது அவை பேய் என்று பிரிகிறது...

உடலுக்கு ஒரு ஆன்மா உடல் செயலற்று பிரியும் பொழுது ஏன் பேயாக ஆகக்கூடாது...

கடவுளின் எதிர்ப்பதம் சாத்தான் இது மதங்களின் கூற்று...

இதில் கூர்ந்து கவனிப்பது
என்னவென்றால், மனிதனுக்கு ஆன்மாவை வரவழைக்கும் சத்தியம் கிடையாது. உடலில் இருந்து ஆன்மாவை பிரித்தெடுக்கும் சக்தியும் கிடையாது.
அது ஒரு மறைக்கப்பட்ட சக்தியினால் இயங்குகின்ற ஒரு மாயை.

பிறக்குமுன் சுற்றித் திரிகின்ற ஆன்மாவால், யாதொரு தீங்கும் இல்லை எனில், இறந்த பிறகு செல்லும், பேய், சாத்தான், ஆன்மா என்று அழைக்கக்கூடிய அந்த சக்தியும்,
தீங்கில்லை...

இறந்தவன் பேயாக வருகையானால்,
உலகில் நொடிக்கொரு கொசுக்களும்,
ஈக்களும், கண்ணுக்கு தெரியா நுண்கிருமிகளும் சாகத்தான்  செய்கிறது. அவைகளைக் கண்டு நாம் பயப்படுவதில்லையே...

இறைவன் இருக்கின்றான். என்று மட்டும் நம்பும் நாம்,
சாத்தான் இருக்கிறது என்று நம்பித்தான் ஆகவேண்டும்...

இங்கு இறைவன் இல்லையேல்,
சாத்தான் இல்லை...

அன்புடன்
Usmanstudio

4 comments: