Monday, September 30, 2019

பிச்சைக்காரன்.Pauper

அம்மா தாயே....
ரொம்ப பசிக்குது ஏதாவது போடுங்கம்மா.....

யாரும் இல்ல போ...

யாரும் இல்லாமலா வீட்டில் குரல் மட்டும் வந்தது.

தன் விதியை நொந்துகொண்டு பிச்சைக்காரன். வீதியில் சென்று பிச்சை எடுத்தான்.
சற்று ஓய்வுக்காக மரநிழல் அருகே, நின்று கொண்டிருந்தான்.
கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி பிச்சை எடுக்கும் நிலைமை என்று பிதற்றிக் கொண்டிருந்தான்.

அப்போது உடல் வற்றிய நிலையில் ஒரு நாய், இவனைப் பார்த்து குரைத்தது.

கண் தெரியாத ஒருவர் தன் கை குச்சியால், அந்த நாயை சூ.. என்று விரட்டி விட்டு சென்றுகொண்டிருந்தார்.

அந்த நேரம் ஓர் ஆடம்பரமான கார் அவள் அருகே வந்தது.
அதில் இருந்த மனிதன் மிக அழகாக கம்பீரமாக தன் கார் கண்ணாடியை இறக்கி இவனுக்கு 100 ரூபாய் நோட்டை போட்டுவிட்டுச் சென்றார்.

மறுநாள் அதே இடம் அதே வண்டி வந்தது. இந்த முறை அந்த நபர் இவனுக்கு பத்து ரூபாய் போட்டுவிட்டு மீதி 90 ரூபாய் வாங்கி சென்றார்.
சில நாட்கள் இப்படியே போனது.

ஒருநாள் அந்த கார் வரவே இல்லை.
சரி இனி வராது என்று அவன் அங்கு நிற்பதை நிறுத்தி விட்டான்.

வேறுஊரில் பிச்சை எடுக்கலாம் என்று நினைத்து கிளம்பினான்.

இந்த நகரத்தில் உங்கள் வெகு பரபரப்பாக சுழன்று கொண்டிருந்தார்கள். இவன் தன் விதி நொந்தபடி பசியால் வாடினான்.

அப்போது அந்த கார் ஒரு உணவகம் அருகில் நிற்பதைக் கண்டான்.
ஓடிச் சென்று அருகில் நின்று கொண்டான். தனக்கு பிச்சை போட்ட இந்த மனிதர் வந்து கொண்டிருந்தார்.

இவன் சற்று ஆடி போனான். அவருக்கு இரு கால்களும் இல்லை. இவன் அருகில் வந்தவர். இவனுக்கு பத்து ரூபாய் கொடுத்து 90 ரூபாய் கேட்டார்.

இவன் ஐயா வேண்டாம் எனக்கு புத்தி வந்தது. இனி பிச்சை எடுக்க மாட்டேன் என்றான்.

ஏன் அப்படி என்று கேட்டார்.

இல்லை  ஐயா,உடல் வற்றிய நிலையில் ஒரு நாயைக் கண்டேன். அது குரைப்பதை நிறுத்தவில்லை. கண் தெரியாத ஒருவர் அந்த நாயை சரியாக விரட்டினார். அவரின் பார்வையை கண்டேன்.
தாங்கள் கால்கள் இழந்த நிலையிலும் எனக்கு பசியாற பணம் தந்தது‌
என்னை திருத்தி விட்டது.
நானும் இனி உழைக்கப் போகிறேன் என்றான்.

அந்த மனிதர் ஒரு உண்டியல் எடுத்தார்.
அவனிடம் நீட்டினார்.
ஐயா, வேண்டாம் இனி பிச்சை வேண்டாம் என்றான்.

இது பிச்சை அல்ல நீ கொடுத்த மீதி 90 ரூபாய் தான். அதை உனக்காக சேர்த்து வைத்தேன். உன் உழைப்பிற்கு மூலதனமாக என் அன்பளிப்பு என்று விட்டுச் சென்றார்.

வாழ்க்கை உணர்ந்த பிச்சைக்காரன்
லட்சிய காரன் ஆனான்.

என்றும் அன்புடன்,
Usman studio

Tuesday, September 24, 2019

Agriculture விவசாயம்


அன்புடையீர் வணக்கம்...

ஒரு தாய் தன் பிள்ளையை, சுமந்து வலி கண்டு, உயிர் பிறக்கும் நேரம்,
அவள் கண்களின் ஓரம்,
ஓர் பாச போராட்ட அலை,
ஓய்ந்து, அவளின் விழிகள்,
ஒருக்க படுத்து நீர் ததும்ப
 கிடைக்கும் ஆனந்தம் போல்,

தூக்கம் விட்டு,
துயர்பட்டு,
கடன்பட்டு
விதை வாங்கி,
ஏறிட்டு. நடவமைத்து,
மழைக்கு காத்து,
மண்ணை பார்த்து,
ஏக்கப் பட்டு,
பூத்தவுடன்,
அவனின் ஆனந்தம் அப்படியே
நான் மலடி இல்லையென்ற
கூக்குரலின் ஆரம்பம்...

உணவை படைத்தவன் கடவுள்
இவனுக்கு மரணத்தை மட்டுமே
தரும் நம் சமூகம்..

ஐந்துரூபாய் நொருக்குதீனி கூட
அவன் வைக்கும் விலை,

இங்கே தன் பிள்ளைக்கு, விலைபேர் கூட,வைக்க முடியாத நிலை விவசாயிக்கு..

லட்சகோடிகள் கடன்பட்டவன்
லட்சணமாய் வாழ்கிறான்...

நமக்கெல்லாம் சோறு போட்டவன்
கடனுக்காய் சாகிறான்...

பிறப்புரிமை சிறப்புரிமை இல்லை
அவர்களுக்கு, இறப்புரிமையே வாழை
போல் விவசாயம் இவர்களுக்கு...

நம்மாள் இவர்களுக்கு உதவ முடியுமா?
நிச்சயமாக முடியும்.

நம் உடலுக்கு நலன் பயக்கும்,விவசாயின் பயிரை அதிகம்
வாங்க வேண்டும்..‌.
கடைதனில், ஆர்கானிக் பயிர்களை கேட்டுகொண்டே இருங்கள்.
அதன் விளைச்சலுக்கு அங்கீகாரம் கிடைக்கும். முடிந்தவரை வாழ்நாளில் ஒரு மரமாகும் செடியாவது நடுங்கள்‌.

நல்ல காற்று உங்களுக்கு,
வான்மழையோ விவசாயிக்கு.

சோறுடைத்த சோழ நாடு,
வேறருத்து போவதில்,
காதறுந்த காதலிக்கு,
திருகாணி தேடுவதை போல்
ஆகிவிடும்...

காப்போம் நம் தலைமுறையை,
விவசாயம் நம் உயிர் சாயம்...


என்றும் அன்புடன்,
Usman studio...

Monday, September 23, 2019

பேய் இருக்கா?

அன்புடையீர் வணக்கம்...

காலம் காலமாக, தீர்க்கமுடியாத ஒரு முடிச்சு அமானுஷ்யம்...

உலகில் பேய் பிசாசு இருக்கிறதா,
இல்லை அவையாகும் வாய்வழி கதைகளா,

உலகில் பகல் இருட்டு, சூரியன் சந்திரன்,
நீர் நெருப்பு, நன்மை தீமை,
இப்படி அற்புதமாய் யாவற்றிலும், இரண்டு துருவங்கள் பயணிக்கின்றன.

கடவுள் மனிதனை படைத்தானா...
மனிதன் கடவுளை படைத்தானா...

இப்படி விடை காண முடியாத கேள்விகள் அதிகம் உலவுகின்றன..

உலகில் பேய்கள் நிச்சயமாக இருக்கத்தான் செய்கிறது, அவை ஒவ்வொரு மொழிக்கும் பெயர் மாறுபடுகிறது.

கருவில் உருவாகும் ஒரு உருவிற்க்கு,
எங்கிருந்தோ, ஒரு உயிர்ப்பிக்கும் ஆன்மா வருகிறது.

அந்த உடலை விட்டு பிரியும் பொழுது அவை பேய் என்று பிரிகிறது...

உடலுக்கு ஒரு ஆன்மா உடல் செயலற்று பிரியும் பொழுது ஏன் பேயாக ஆகக்கூடாது...

கடவுளின் எதிர்ப்பதம் சாத்தான் இது மதங்களின் கூற்று...

இதில் கூர்ந்து கவனிப்பது
என்னவென்றால், மனிதனுக்கு ஆன்மாவை வரவழைக்கும் சத்தியம் கிடையாது. உடலில் இருந்து ஆன்மாவை பிரித்தெடுக்கும் சக்தியும் கிடையாது.
அது ஒரு மறைக்கப்பட்ட சக்தியினால் இயங்குகின்ற ஒரு மாயை.

பிறக்குமுன் சுற்றித் திரிகின்ற ஆன்மாவால், யாதொரு தீங்கும் இல்லை எனில், இறந்த பிறகு செல்லும், பேய், சாத்தான், ஆன்மா என்று அழைக்கக்கூடிய அந்த சக்தியும்,
தீங்கில்லை...

இறந்தவன் பேயாக வருகையானால்,
உலகில் நொடிக்கொரு கொசுக்களும்,
ஈக்களும், கண்ணுக்கு தெரியா நுண்கிருமிகளும் சாகத்தான்  செய்கிறது. அவைகளைக் கண்டு நாம் பயப்படுவதில்லையே...

இறைவன் இருக்கின்றான். என்று மட்டும் நம்பும் நாம்,
சாத்தான் இருக்கிறது என்று நம்பித்தான் ஆகவேண்டும்...

இங்கு இறைவன் இல்லையேல்,
சாத்தான் இல்லை...

அன்புடன்
Usmanstudio

Transgender அரவாணிகள்

அன்புடையீர் வணக்கம்,

இந்த உலகத்தில் ஆண் பெண் அடுத்ததாக பிளஸ் மைனஸ், ப்ரோட்டான் நியூட்ரான், மேல் கீழ், வானம் பூமி இப்படி எல்லாமே இரண்டாக அதுவும் எதிரும் புதிருமாக படைக்கப்பட்டவை இதில் மூன்றாவதாக, 1 இடம் பிடிப்பது இல்லை.

அப்படித்தான் நம் சமூகத்தில், அரவாணி என்றும் திருநங்கைகள் என்றும், ஒரு பிரிவு உருவாகியுள்ளது.

இது பலபேர் கூறுவதுபோல் உலக நியதி அல்ல. இறைவன் அருளிய வரமும் அல்ல. மாற்றாக இது வளர்ப்பின், அடிப்படை
வளரும் விதமே...

காரண கூற்றாக ஒன்று,
நாம் நம் பிள்ளைகளை, வளர்க்கும் விதம் அன்பாகவும், கடினமாகவும் அவர்களுக்கு கற்றுத்தரும் விதமும் ஒரு காரணமாகும்.

ஒரு ஆண் பிள்ளை, அக்கம்பக்கத்தார் உடன் உள்ள பெண் பிள்ளைகளுடன், சிறுவயதில் இணைந்து விளையாடும் பழக்கம் இதுவும் ஒரு காரணம். பெண் பிள்ளைகளுடன் விளையாடுவதால்,
அவர்கள் பெண்களின் விளையாட்டையும் பெண்களின் அசைவுகளையும் பெண்களின் நாணங்களையும், கற்றுக்கொள்கிறார்கள்.

இதை நம் வீட்டில் அந்த குழந்தை செய்யும் பொழுது சிறு பிள்ளை செய்கிறது என்று விடுவதால் காலப்போக்கில் அவையே தன்னை பெண்ணாக மாற்றிக் கொள்ளும் அறியாமையில் விழுந்துவிடுகிறது.

நாம் எதைக் கற்றுத் தருகிறோமோ, அதைத்தான் குழந்தைகள் கற்றுக் கொள்ளும்.

நம் நாட்டில், ஒரு ஆண்குழந்தை அரவாணியாக மாறுவது, இங்கு இயல்பாக நடக்கின்றது. அந்த குழந்தைக்கு அரவாணி என்றும் திருநங்கை என்றும் ஒன்பது என்றும் அடைமொழியிட்டு கூறுகிறோம்.

இதுவே ஒரு பெண்பிள்ளை, தன்னை ஆணாக காட்டிக்கொண்டு ஆண் பிள்ளைத்தனமாக வீரதீர செயல்கள் செய்தால், அவற்றை பாராட்டுகிறோம்

ஆக பெண்பிள்ளை ஆணாக மாறினால்,
அந்த குழந்தையை அரவான் என்றா அழைக்கின்றோம் அல்லது திருநங்கன்,
என்றா அழைக்கிறோம்.

இல்லை இது சமுதாயக் கூற்று...

பிள்ளைகள் வளர்வதும் வாழ்வதும், சுற்றம் சூழலே காரணமாய் அமைகிறது.

இது ஒருவித மன மாற்றம்தான்.
இது உடல் கூறுகளின் வேறுபாடு அல்ல..

இறைவனால் படைக்கப்பட்ட இரண்டு சக்திக்கு உட்பட்டு வேறு சக்தி இல்லை..

ஆகவே குழந்தைகளை வளர்க்கும் விதத்தில் மிகக்கவனமாக சுதாரித்து
அவர்கள் போக்கை கவனித்து, மாற்றம் அளித்து வந்தால்,

அடுத்த தலைமுறைக்கு திருநங்கை என்ற ஒரு பெயர் வராது....

என்றும் அன்புடன்
*Usman studio

Sunday, September 22, 2019

Traffic rolls

வணக்கம் டிராபிக் ரூல்ஸ்.

தற்பொழுது, நமது அரசாங்கம் போக்குவரத்துத்துறை சட்ட திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது.
ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம்.
குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் அதற்கு ஒரு அபராதம். இரண்டு சக்கர வாகனத்தில் 3 பேர் சென்றால் அதற்கு ஒரு அபராதம். இன்சூரன்ஸ் இல்லாமல் சென்றால் அதற்கும் ஒரு அபராதம்.இவையெல்லாம் தற்போது ஏடிஎம் மெஷின் ஆல் ஸ்வைப் செய்து அரசாங்கத்திற்கு நேரடியாக பணம் போகப்போகிறது.
அப்படி உங்களிடம் ஏடிஎம் கார்டு இல்லை என்றால் நீங்கள் இ-சேவை மையத்தில் அல்லது எஸ் பி ஐ வங்கிலோ, கட்ட வேண்டும் தவறினால் உங்களுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்படும் அத்துடன் ஈபி பில் கட்ட முடியாது இப்படிப்பட்ட சட்டதிட்டங்களை சிறு மாற்றங்கள் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

500 ரூபாய் தண்டம் போட்டு 500 ரூபாய்க்கு ஒரு ஹெல்மெட்டை தந்தால், அடுத்த முறை அவர்களுடன் வருவார் மீண்டும் வந்தால் இச்சம்பவம் தொடரவேண்டும்.

இதேபோல் இன்சூரன்ஸ் விஷயத்திலும் செய்தால் அனைவரும் இன்சூரன்ஸ் உடன் இருப்பார்கள்.

குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது யார் தவறு அரசாங்கத்திடமிருந்து இது ஆரம்பிக்கிறது.
வீதிக்கு ஒரு டாஸ்மாக் எனும் அரக்கனை பிறக்க வைத்தது இந்த அரசாங்கம்.
அப்படி குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பிடிக்க வேண்டுமென்றால்,
ஒயின்ஷாப்பில் வாசலில் காவல் துறை அதிகாரி ஒருவர் இருக்க வேண்டும்.
இரண்டு சக்கர வாகனத்தில்
மூன்று பேர் சென்றால்,
பிடிக்கும் இந்த அரசு
முதலில் அரசு பேருந்துகளில் 52 பிளஸ் 2இரண்டு என்ற விகிதத்தில்,
பேருந்துகள் இயக்க படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
தனியார் பேருந்துகளிலும் இதே நிலை.

இந்தத் அண்டங்களை கட்டத் தவறினால் அரசாங்கம் ஈபி பில் கட்ட முடியாது என்று அறிவித்துள்ளது.

முதலில் அங்கு சென்று பார்ப்போம்.

மாதம் ஒருமுறை, ஒரு ரூபாய் என்ற விகிதத்தில் 100 யூனிட் உபயோகப்படுத்தினால், 100 ரூபாய் தான் கட்ட வேண்டும்.
100 யூனிட்டுக்கு மேல் சென்றால் இரண்டு ரூபாய் ஆகிறது.
இரண்டு மாதத்திற்கு 200 யூனிட்டுக்கு 400 ரூபாய் கட்டச் சொல்லும் பகல் கொள்ளை இங்குதான் நடக்கிறது.
இதில் தகவல் அறியும் சட்டமோ,
மனித உரிமை அமைப்புளோ,
எதிர்கட்சிகளோ கேட்பதில்லை...

மக்களுக்குத்தான் சட்டமே தவிர
சட்டம் மக்களை வதைக்க அல்ல...

இவையாவும் இங்கே அரங்கேறும் அரசாங்க ஞாயங்கள்....

இவன்,
Usman studio...